Saturday, November 5, 2016

இலங்கையின் 25 மாவட்டங்களை கோர்த்து என்னால் எழுதப்பட்ட அவள் நினைவுகள். .



யாழ் இசையின் வரிகளால் கூந்தல் கோர்த்த வன்னிக்கன்னின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் கோர்க்கிறேன். .
முல்லைக் கொடியாய்.. .

அவள் இதயம் திருமலையூர் பாறை.
அம்பாறையில் புத்தளத்தில் செதுக்கிய சிலைதான் என்னுறுவம். .
அது மட்டுமா. . ??
அவள் இடை வளை வர்ணித்தால் பாவம்
மண் ஆறும் வர்த்தம் தெரிவிக்கும். .

என் காதல் காய்ச்சல் போக்கிய- கிளி
நொச்சிச் செடியவள்- என் மேனி சூடு தனித்த
நுவரெலிய இளம் குளிரவள்.


அவள் பற்கள் இரத்தினபுரி
இரத்தினங்கள்.
வெள்ளியில் வானம் தொட்ட
அனு ராதம் அவள். .


முற்றத்து கோலத்து
நடுநின்று அழகாக்கும்
கோலம்பூ அவள். .
மா தழையில் காய்த்த
மாங்கனி அவள். .
இளநீரின்
மா தறை அவள் கண்மணிகள். .

குறு நகலில் ஆயிரம் அர்த்தம்
சொல்லும் ஹைக்கூ அவள்.
கழு தரையில் பாய்ந்து என்
இதயம் தாக்கும் கூர்மைப் பார்வையவள்.


நடு நிசி நேரம் மௌன ரகலை
செய்யும் இதழவள்.- என்
கைகள் கோர்த்து
அகிம்சை கண்டிக்கும்
கண்ணழகியவள்..


ரவிவர்மன்
கலைக் கேகலை யவள். .
பா துளையாள் மீட்டும் பா குரலவள். .
ஐம் புலன்னருவை செய்யும்
கூருகில் அவள்.
கம்பஹா களனி போல் - என்
மீது நீண்ட காதல் கொண்டவள்.


அன்பாந் தோட்டை யணிந்த
காதழகியவள்.
நான் இல்லாத அவள் வாழ்வில்
இதயத்தால் காலியானவள்


இருபது அழகால் பூர்த்தியானவள்
இன்று என்னருகில்
இல்லாத பாவியாய்
புலம்ப காரணமானவள். .

திருமலையூர் ரைஸ்
பிழைகள் கருத்து தெளிவிற்கு என்னை நாடவும்
பிடித்திருந்தால் என் முகநூல் பக்கத்தை லைக் செய்யவும்
*திருமலையூர் புத்தனின் புதுமை*

No comments:

Post a Comment