Tuesday, November 22, 2016

அறிவித்தல்..

அஸ்ஸலாமு அலைக்கும் 
வணக்கம் 
நட்புக்களே !!!!
என்னுடைய வலைத்தளம் வேறு ஒரு வலைத்தளமான மாற்றப் பட்டுள்ளது..
for more details......
+94755676363

எனது புது வலைத்தளம்... Click Here

Friday, November 11, 2016

நாறிப் போன மணம்

நபி வழியை
கவி வடிவில்
துதி பாடினும்
புவி மாறாதே- என்
கவி அடியில்
மதியுடையான்
அதி பயன்
பெற்றாலே
அகம் மகிழ்வேனே. .

கண் கண்டு
காதல் கொண்டு
கரம் பற்றி - வீடு
கூடு -இது
காதலில்
நாறிப் போன
முதல் மணம். .

விலைவாசியில்
பெண் பேசி
ஏறிப் போன
இலாபத்தில்
அறை கூடி
சீர் வரிசையில்
சீர் கெட்டு
நாறிப் போச்சி
நம் மணம். .

மாறிப் போன
நம் நபி வழி
வலீமா.
பெண் வீட்டு
வலீமா- நம்
நபி வழியா. .??
வீண் விரயம்
நம் மணத்தில்
நாறுகிறது. .

தாலி கட்டிப் போன
கலாச்சாரம்
நம் மனதில்
கடமையாய்
கூடிடுச்சு -நம்
மணத்தில்
நாறிப் போனது
மஹர் கட்டி
மணம் கட்டியது
பிற மணம்
நம் மணத்தில்
கலந்து
நாறுகிறது

இறை மறை
திரு மறை
வாக்கை விட
இந்த
திருமலையூரான்
கூற்றிலா
திருந்திடுவான்
நம் மனிதன். .??
மணம் மாறி
நாறி விட்டது. .
அது மாறி
விட்டது. .

*திருமலையூரான் ரைஸ்*

தண்ணி எடுக்கப் போறவளே. !

அந்தி மசங்கிய நேரமிதில்
இடை வளையிடையில்
மற் குடம் ஏந்தி
கங்கையாத்துப் பக்கம்
தண்ணி எடுக்கப் போறவளே. !

இது
ஊரெல்லாம் கட்டுக் காளை
கூடும் நேரமடி. .
உன் மேல் கண் பட்டு
உன் மேனி பட்டுப்
போகுமடி. .
கன்னி கலையாம வீடு
வந்து விடடி. . .




வேலைக்காரிக்கு பிள்ளை
சாட்டாய்
வயல் மேட்டில் உலாவும்
கலை பார்த்திட
குடமேந்திப்
போகும் பிணை மானே. .
வயல் வெட்டி உன் அப்பன்
வரும் நேரமடி இது. .
கவனமடி
அவர் கண் கட்டி வீடு
வந்து சேர்ந்துடடி.

தினம் உன்னோடு வரும்
தோழி எனக்கு - இன்று
உடல் அக்னியால்
உருகி கொதிக்குதடி.
பார்த்து சென்று
பக்குவமாய் - வீடு
திரும்பி விடடி. .

திருமலையூர் ரைஸ்

Saturday, November 5, 2016

இலங்கையின் 25 மாவட்டங்களை கோர்த்து என்னால் எழுதப்பட்ட அவள் நினைவுகள். .



யாழ் இசையின் வரிகளால் கூந்தல் கோர்த்த வன்னிக்கன்னின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் கோர்க்கிறேன். .
முல்லைக் கொடியாய்.. .

அவள் இதயம் திருமலையூர் பாறை.
அம்பாறையில் புத்தளத்தில் செதுக்கிய சிலைதான் என்னுறுவம். .
அது மட்டுமா. . ??
அவள் இடை வளை வர்ணித்தால் பாவம்
மண் ஆறும் வர்த்தம் தெரிவிக்கும். .

என் காதல் காய்ச்சல் போக்கிய- கிளி
நொச்சிச் செடியவள்- என் மேனி சூடு தனித்த
நுவரெலிய இளம் குளிரவள்.


அவள் பற்கள் இரத்தினபுரி
இரத்தினங்கள்.
வெள்ளியில் வானம் தொட்ட
அனு ராதம் அவள். .


முற்றத்து கோலத்து
நடுநின்று அழகாக்கும்
கோலம்பூ அவள். .
மா தழையில் காய்த்த
மாங்கனி அவள். .
இளநீரின்
மா தறை அவள் கண்மணிகள். .

குறு நகலில் ஆயிரம் அர்த்தம்
சொல்லும் ஹைக்கூ அவள்.
கழு தரையில் பாய்ந்து என்
இதயம் தாக்கும் கூர்மைப் பார்வையவள்.


நடு நிசி நேரம் மௌன ரகலை
செய்யும் இதழவள்.- என்
கைகள் கோர்த்து
அகிம்சை கண்டிக்கும்
கண்ணழகியவள்..


ரவிவர்மன்
கலைக் கேகலை யவள். .
பா துளையாள் மீட்டும் பா குரலவள். .
ஐம் புலன்னருவை செய்யும்
கூருகில் அவள்.
கம்பஹா களனி போல் - என்
மீது நீண்ட காதல் கொண்டவள்.


அன்பாந் தோட்டை யணிந்த
காதழகியவள்.
நான் இல்லாத அவள் வாழ்வில்
இதயத்தால் காலியானவள்


இருபது அழகால் பூர்த்தியானவள்
இன்று என்னருகில்
இல்லாத பாவியாய்
புலம்ப காரணமானவள். .

திருமலையூர் ரைஸ்
பிழைகள் கருத்து தெளிவிற்கு என்னை நாடவும்
பிடித்திருந்தால் என் முகநூல் பக்கத்தை லைக் செய்யவும்
*திருமலையூர் புத்தனின் புதுமை*

Thursday, November 3, 2016

உண்மை காதலர்களுக்கு மட்டும்

உண்மை காதலர்களுக்கு மட்டும்






நீதி மறந்த நம் சோக நினைவடுக்கள்......??
மறையாத காயம் தந்து...
கறையாத கற்சிற்பமாய்...
எம் நெஞ்சில்
செதுக்கப்பட்ட
நினைவடுக்கள் அவை....
காலம் மாறலாம்- பல
யுகம் மாறலாம்...
மாறாதே ஆறாதே
நம் மீது வரைந்த
காய ஓவியம்....


(01)
(1990-ஒக்டோபர்)
ஈர் கொள்கையேந்தி...
ஈரினம் போர்
மழை சூழ்ந்த நேரம்
ஊர் விட்டு-பிறந்த
பார் விட்டு...
அன்று பிறந்த பாலகனும்
அகதிப் பெயரேந்தி..
மழை சூழ்ந்த மாரி காலமதில்
மழலை ஏந்திய கரங்களும்
சிகை நனைந்திடவே..
நகை பறித்து
ஜந்து பொட்டளத்துடன் - விஷ
ஜந்து கூட்டமொன்றால்
அகதியென்று அடையாளமாக்கி
ஓரினம் வரைந்த
ஓவிய ஈரம்
இன்னும் காயவி;ல்லை..



(02)
(1990-ஆகஸ்ட்-03)

மறை ஓதி
இறை தொழுத
இராப்பொழுது நேரமதில்
பள்ளி சூழ்ந்து
ஆண்மையில் லாப்படையொன்று
கிழ நெஞ்சி இள நெஞ்சி பாரா
விஷ நெஞ்சக் கூட்டமொன்று
கொலை வெறி பிடித்து
பிஞ்சுப் பாலகன் நெஞ்சையும்
பிளந்து சென்ற
துப்பாக்கிச் செல்லுக்கும்
மடிந்த செல்வனுக்கும்
தெரியாது...
நான் ஏன் துளைக்கிறேன்..?
நான் ஏன் மடிகிறேன்..?
என்று..
இரத்தம் வடித்த வர்ணோவியம்
எம் நெஞ்சிலிருந்தழியாது
உலகழிவு வரை....


சொல்ல வந்த பழஞ்சோகம்
ஒன்றிரண்டல்ல...
வட முனை தொடங்கி
தென்முனை வரை
வன்முறை வாய்க்காலில்
எம்மின குறுதியோட்டம்
பாய்ந்தோடிய தடங்கள்
இன்னும் அழியவில்லை..
இரா வானில்
கார் மேகம் மறைத்த
உடுக்களவை.....
சொல்லி விடலாம்
வானம் போல்
காகிதம் விரிக்கப்பட்டால்......

திருமலையூர் ரைஸ்

Tuesday, November 1, 2016

மான் விழியே மயக்கமென்ன. .??


மான் விழியே மயக்கமென்ன. .??

தலைவன் காணா கொடுமையில்
பேதை உன்விழி
போதையானதோ. . .??

அருவடைக்குச் சென்றவன். .
வருகை காத்து
தாங்காத உன்மனம்
தூங்காத உன்விழியில்
மயங்கியதா. . ??
மான் விழியே. . . !! உன் விழி
மயங்கவும் - அவன் வரும் வழி
மயக்கிக் கொள்ளவும்
காரணம் என்னவோ. . .??

மனமான ஈருருளில்
முதல் இரவால்
சீரகமான உன் மனம்
மறு இருள் சூழ முதல்
வெளிக்கிழம்பிய தலைவன் காத்து
தூங்காத உன் விழியில் மயங்குகிறதா. . ??
உன் தொடை நளைந்து
காய்ந்த ஏக்கத்தில்
உன் விழி உறங்க மறுக்கிறதா. . ??
மான் விழியே மயக்கமென்ன. .??

திருமலையூர் ரைஸ்

விதைப்போம். . .

Image may contain: one or more people
விதைப்போம். . .
அன்பில்லா உள்ளத்தில்
வன்பில்லா கருனை
விதைப்போம். . .

முடியாதென்று வீழும் 
முயலாமைக்கு 
முடியுமென்ற துணிவை
விதைப்போம். .

தோற்றுப் போன உள்ளம்
தேற்ற -நீ
நாளை வெல்வாய் என்ற
தைரியம்
விதைப்போம். .

பெற்றோர் கற்றோர்
மூத்தோர் 
மதிக்காத 
மதி மங்கியோருக்கு
மரியாதை எனும்
பக்குவம்
விதைப்போம். .

சோதினை தீர்வு கண்டு
சோதனை கொண்ட
வேதனை உள்ளத்திற்கு
உயர்வினைப் பெற
தன்னம்பிக்கை 
விதைப்போம்.

தீராத தோல்வியில்
சோர்வான உளத்திற்கு
தீர்வாக
உற்சாகம் எனும்
ஊக்கம்
விதைப்போம்.

ஒழுக்கமில்லா
குழந்தைக்கு
"ஒழுக்க முடைமை 
குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
என்று கூறி
ஒழுக்கம் 
விதைப்போம்.

பக்குவமில்லாப் பிள்ளை
நற்குணம் பெற்றிட
அடித்து வளர்க்காமல்
அன்பெனும் பன்பை
ஊற்றி
விதைப்போம்.


இளம் பிள்ளைக்கு
அறிவை விதைப்போம்.
வளர் பிள்ளைக்கு
ஆற்றளை விதைப்போம்
வளர்ந்த இளைஞனுக்கு
உயர விதைப்போம். . 
நம்மில்லா நல்ல குறையறிந்து.
நம்மை நாமே விதைப்போம். .

திருமலையூர் ரைஸ்

இரவல்_வெளிச்சம்

தினக்கவிதை
1/11/2016
தலைப்பு
*************************
இரவல்_வெளிச்சம்

*************************

வீடு வரை
சொல்லாத காதலொன்று
காடு வரை
நில்லாத மோகமொன்று
தாலி கட்டி
கைமாறிப் போனது இன்று. .

காதலில்
காமமும் கலந்தது அன்று.
அவளோர் தொடர் கதையாய்
அது தொடருது இன்று. .
இது தாளி கட்டிப் போனவனன்று
காதலித்தவனுடன் கூடிய செயலொன்று.

கசங்காத சேலையில் இன்பம் கண்டு
அடங்காத ஆசையெல்லாம் அவனைக் கொண்டு
தீராத மோகத்தை திருப்தி படுத்தினான் - அவன்
தினம் சென்று.

பலநாள் அரங்கேரிய நாடகமொன்று
சுதந்திரமாய்ப் பறந்து கூட்டுக்கிளியாய்
அகப்பட்டது இன்று
அரங்கேறிய அவமானத்துடன்
இரவல் வெளிச்சமானது நன்று. .

சொல்லாத உண்மைக் கதையொன்று. .
இரவல் வெளிச்சமால்
உலகமறியுது இன்று
உளச் சோகம்
மறையுமென்று
பிறர் சொல்வதும் நன்று. .


திருமலையூர் ரைஸ்