Thursday, November 3, 2016




நீதி மறந்த நம் சோக நினைவடுக்கள்......??
மறையாத காயம் தந்து...
கறையாத கற்சிற்பமாய்...
எம் நெஞ்சில்
செதுக்கப்பட்ட
நினைவடுக்கள் அவை....
காலம் மாறலாம்- பல
யுகம் மாறலாம்...
மாறாதே ஆறாதே
நம் மீது வரைந்த
காய ஓவியம்....


(01)
(1990-ஒக்டோபர்)
ஈர் கொள்கையேந்தி...
ஈரினம் போர்
மழை சூழ்ந்த நேரம்
ஊர் விட்டு-பிறந்த
பார் விட்டு...
அன்று பிறந்த பாலகனும்
அகதிப் பெயரேந்தி..
மழை சூழ்ந்த மாரி காலமதில்
மழலை ஏந்திய கரங்களும்
சிகை நனைந்திடவே..
நகை பறித்து
ஜந்து பொட்டளத்துடன் - விஷ
ஜந்து கூட்டமொன்றால்
அகதியென்று அடையாளமாக்கி
ஓரினம் வரைந்த
ஓவிய ஈரம்
இன்னும் காயவி;ல்லை..



(02)
(1990-ஆகஸ்ட்-03)

மறை ஓதி
இறை தொழுத
இராப்பொழுது நேரமதில்
பள்ளி சூழ்ந்து
ஆண்மையில் லாப்படையொன்று
கிழ நெஞ்சி இள நெஞ்சி பாரா
விஷ நெஞ்சக் கூட்டமொன்று
கொலை வெறி பிடித்து
பிஞ்சுப் பாலகன் நெஞ்சையும்
பிளந்து சென்ற
துப்பாக்கிச் செல்லுக்கும்
மடிந்த செல்வனுக்கும்
தெரியாது...
நான் ஏன் துளைக்கிறேன்..?
நான் ஏன் மடிகிறேன்..?
என்று..
இரத்தம் வடித்த வர்ணோவியம்
எம் நெஞ்சிலிருந்தழியாது
உலகழிவு வரை....


சொல்ல வந்த பழஞ்சோகம்
ஒன்றிரண்டல்ல...
வட முனை தொடங்கி
தென்முனை வரை
வன்முறை வாய்க்காலில்
எம்மின குறுதியோட்டம்
பாய்ந்தோடிய தடங்கள்
இன்னும் அழியவில்லை..
இரா வானில்
கார் மேகம் மறைத்த
உடுக்களவை.....
சொல்லி விடலாம்
வானம் போல்
காகிதம் விரிக்கப்பட்டால்......

திருமலையூர் ரைஸ்

No comments:

Post a Comment