Friday, November 11, 2016

நாறிப் போன மணம்

நபி வழியை
கவி வடிவில்
துதி பாடினும்
புவி மாறாதே- என்
கவி அடியில்
மதியுடையான்
அதி பயன்
பெற்றாலே
அகம் மகிழ்வேனே. .

கண் கண்டு
காதல் கொண்டு
கரம் பற்றி - வீடு
கூடு -இது
காதலில்
நாறிப் போன
முதல் மணம். .

விலைவாசியில்
பெண் பேசி
ஏறிப் போன
இலாபத்தில்
அறை கூடி
சீர் வரிசையில்
சீர் கெட்டு
நாறிப் போச்சி
நம் மணம். .

மாறிப் போன
நம் நபி வழி
வலீமா.
பெண் வீட்டு
வலீமா- நம்
நபி வழியா. .??
வீண் விரயம்
நம் மணத்தில்
நாறுகிறது. .

தாலி கட்டிப் போன
கலாச்சாரம்
நம் மனதில்
கடமையாய்
கூடிடுச்சு -நம்
மணத்தில்
நாறிப் போனது
மஹர் கட்டி
மணம் கட்டியது
பிற மணம்
நம் மணத்தில்
கலந்து
நாறுகிறது

இறை மறை
திரு மறை
வாக்கை விட
இந்த
திருமலையூரான்
கூற்றிலா
திருந்திடுவான்
நம் மனிதன். .??
மணம் மாறி
நாறி விட்டது. .
அது மாறி
விட்டது. .

*திருமலையூரான் ரைஸ்*

No comments:

Post a Comment