அந்தி மசங்கிய நேரமிதில்
இடை வளையிடையில்
மற் குடம் ஏந்தி
கங்கையாத்துப் பக்கம்
தண்ணி எடுக்கப் போறவளே. !
இடை வளையிடையில்
மற் குடம் ஏந்தி
கங்கையாத்துப் பக்கம்
தண்ணி எடுக்கப் போறவளே. !
இது
ஊரெல்லாம் கட்டுக் காளை
கூடும் நேரமடி. .
உன் மேல் கண் பட்டு
உன் மேனி பட்டுப்
போகுமடி. .
கன்னி கலையாம வீடு
வந்து விடடி. . .
ஊரெல்லாம் கட்டுக் காளை
கூடும் நேரமடி. .
உன் மேல் கண் பட்டு
உன் மேனி பட்டுப்
போகுமடி. .
கன்னி கலையாம வீடு
வந்து விடடி. . .
வேலைக்காரிக்கு பிள்ளை
சாட்டாய்
வயல் மேட்டில் உலாவும்
கலை பார்த்திட
குடமேந்திப்
போகும் பிணை மானே. .
வயல் வெட்டி உன் அப்பன்
வரும் நேரமடி இது. .
கவனமடி
அவர் கண் கட்டி வீடு
வந்து சேர்ந்துடடி.
சாட்டாய்
வயல் மேட்டில் உலாவும்
கலை பார்த்திட
குடமேந்திப்
போகும் பிணை மானே. .
வயல் வெட்டி உன் அப்பன்
வரும் நேரமடி இது. .
கவனமடி
அவர் கண் கட்டி வீடு
வந்து சேர்ந்துடடி.
தினம் உன்னோடு வரும்
தோழி எனக்கு - இன்று
உடல் அக்னியால்
உருகி கொதிக்குதடி.
பார்த்து சென்று
பக்குவமாய் - வீடு
திரும்பி விடடி. .
தோழி எனக்கு - இன்று
உடல் அக்னியால்
உருகி கொதிக்குதடி.
பார்த்து சென்று
பக்குவமாய் - வீடு
திரும்பி விடடி. .
திருமலையூர் ரைஸ்

No comments:
Post a Comment