Tuesday, November 1, 2016

இரவல்_வெளிச்சம்

தினக்கவிதை
1/11/2016
தலைப்பு
*************************
இரவல்_வெளிச்சம்

*************************

வீடு வரை
சொல்லாத காதலொன்று
காடு வரை
நில்லாத மோகமொன்று
தாலி கட்டி
கைமாறிப் போனது இன்று. .

காதலில்
காமமும் கலந்தது அன்று.
அவளோர் தொடர் கதையாய்
அது தொடருது இன்று. .
இது தாளி கட்டிப் போனவனன்று
காதலித்தவனுடன் கூடிய செயலொன்று.

கசங்காத சேலையில் இன்பம் கண்டு
அடங்காத ஆசையெல்லாம் அவனைக் கொண்டு
தீராத மோகத்தை திருப்தி படுத்தினான் - அவன்
தினம் சென்று.

பலநாள் அரங்கேரிய நாடகமொன்று
சுதந்திரமாய்ப் பறந்து கூட்டுக்கிளியாய்
அகப்பட்டது இன்று
அரங்கேறிய அவமானத்துடன்
இரவல் வெளிச்சமானது நன்று. .

சொல்லாத உண்மைக் கதையொன்று. .
இரவல் வெளிச்சமால்
உலகமறியுது இன்று
உளச் சோகம்
மறையுமென்று
பிறர் சொல்வதும் நன்று. .


திருமலையூர் ரைஸ்

No comments:

Post a Comment