விதைப்போம். . .
அன்பில்லா உள்ளத்தில்
வன்பில்லா கருனை
விதைப்போம். . .
முடியாதென்று வீழும்
முயலாமைக்கு
முடியுமென்ற துணிவை
விதைப்போம். .
தோற்றுப் போன உள்ளம்
தேற்ற -நீ
நாளை வெல்வாய் என்ற
தைரியம்
விதைப்போம். .
பெற்றோர் கற்றோர்
மூத்தோர்
மதிக்காத
மதி மங்கியோருக்கு
மரியாதை எனும்
பக்குவம்
விதைப்போம். .
சோதினை தீர்வு கண்டு
சோதனை கொண்ட
வேதனை உள்ளத்திற்கு
உயர்வினைப் பெற
தன்னம்பிக்கை
விதைப்போம்.
தீராத தோல்வியில்
சோர்வான உளத்திற்கு
தீர்வாக
உற்சாகம் எனும்
ஊக்கம்
விதைப்போம்.
ஒழுக்கமில்லா
குழந்தைக்கு
"ஒழுக்க முடைமை
குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
என்று கூறி
ஒழுக்கம்
விதைப்போம்.
பக்குவமில்லாப் பிள்ளை
நற்குணம் பெற்றிட
அடித்து வளர்க்காமல்
அன்பெனும் பன்பை
ஊற்றி
விதைப்போம்.
இளம் பிள்ளைக்கு
அறிவை விதைப்போம்.
வளர் பிள்ளைக்கு
ஆற்றளை விதைப்போம்
வளர்ந்த இளைஞனுக்கு
உயர விதைப்போம். .
நம்மில்லா நல்ல குறையறிந்து.
நம்மை நாமே விதைப்போம். .
திருமலையூர் ரைஸ்

No comments:
Post a Comment